ஆசான் பத்மராஜனின் பெரும்பாலான படங்களின் சாரம் உடல்கள் என்ற 'பாலியல் கருவி' மூலம் செலுத்தப்படும் அதிகாரமும், அது எவ்வாறு இரு பாலினங்களுக்கும் இடையில் செயல்படுகிறது என்பதும் தான். இன்னும் சொல்வதானால், ஆண் உடல் எவ்வாறு தன் பாலினத்தை காரணம் காட்டி, பெண்ணுடல் மீதும், அவளின் அக உணர்ச்சிகள் மீதும், தன் அதிகாரத்தை செலுத்துகிறது, பின் எந்தெந்த ஒழுக்க விழுமியங்களை காரணம் காட்டி, தன் அதிகாரத்திற்கு நியாயத்தை கற்பிக்க முயல்கிறதென்பதை பேசுகிறது. இதில் பல ஆண் உடல்கள் கோமாளிகளாகவும், தோல்வியுற்று அழும் கோழைகளாகவும் முடிந்து போவதை காணலாம்.
இயக்குனர் பரதனுடனான இவரது திரைக்கதைகள் மேற்சொன்ன கதைபொருள்களில் முக்கியமானவை. இந்த கூட்டணி படங்களுக்கு மதுரையில் பெருங்கூட்டம் வந்து முட்டுமாம். அவர்களுக்கு 'வேறு' காரணம் இருந்ததாக எஸ்.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
இவரின் 'ஓரிடதொரு பயில்வான்' எனக்கு மிக முக்கியமான படம். தொடருக்காக காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் Mani Mkmani
