ஓநாய் குலச்சின்னம்.
மேய்ச்சல் நிலத்துக்காரர்கள் அவர்களின் மூதாதைய இனமான ஓநாய்களிடமிருந்து, தங்கள் இனத்தின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஊந்து விசையையும், தன் சந்ததிகளுக்கு சேமித்துவைக்க ஞான அறநெறியையும் பயின்றிருக்கிறார்கள். இந்த பாடமானது வானிலை, நிலத்தோற்றம் மற்றும் அதன் குணங்கள், சக உயிரினங்கள் மற்றும் அவை இருத்தலுக்கான நியாங்கள், தங்களுடைய மற்றும் தங்களுடைய எதிரிகளின் பலங்கள், பல்வேறு வகையான தாக்குதல்கள், யுத்த வழிமுறைகள், அந்த யுத்தங்கள் கோரும் பொறுமைகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் அல்லது ஒரு இனம், தன் எதிரிகளிடம் அடிமைப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள, தான் சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலம் போன்றவற்றை கொண்டது.
மேலும் இந்நாவல் எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த பெருநிலமானது எந்த உயிரின அதிகாரத்திற்கு கட்டுப்படுகிறது? தன் சக அதிகார உயிரினங்களுடன் எப்பொழுதும் இறுக்கம் கொண்டே வளர்ந்து வரும் ஒரு உறவை, இந்த அதிகார உயிரினங்கள் எவ்வாறு அனுபவித்து தன்னை வளர்த்துக்கொள்கின்றன? தங்கள் கலாச்சாரங்களின் வளர்ச்சிகள் / தோல்விகள் என்பது, சக அதிகார மனித இனங்கள் அல்லது சக அதிகார உயிரினங்களுடனான முரணிலிருந்து தொடங்குகிறதா? அல்லது இப்பெருநிலமே தான் எல்லாவற்றுக்குமான ஏக அதிகாரம் படைத்த ஒரு உண்மையா?
சீன மொழி மூலம் : ஜியாங் ரோங்.
தமிழில் சி.மோகன் மொழிப்பெயர்க, இயக்குனர் வெற்றிமாறனின் 'அதிர்வு பதிப்பகம்' வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment